FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, December 29, 2010

மௌலானா ஒலியுல்லாவின் கொடி இறக்க நிகழ்ச்சியும்! மார்க்க பீரங்கிகளின் சொற்ப்பொழிவு பேச்சும்!!

Wednesday, December 29, 2010
7:48 PM
      நமதூர்  ராஜாத் தெருவில் 27/12/2010 அன்று  இரவு மௌலானா ஒலியுல்லாவின் பக்த கோடிகளால் கொடியிறக்க நிகழ்ச்சியும்,  அதை தொடர்ந்து மார்க்கச் சொற்ப்பொழிவு என்ற பெயரில் ஒரு நாடகமும் அரங்கேறியது. நல்லோர்கள் வழியில் நாம் என்ற தலைப்பில் முதலில் பேசுவதற்காக இருந்த நமதூர் பெரியப் பள்ளி இமாம் பீர் முஹம்மது, கேட்பதற்கு ஆள் இல்லாத காரணத்தால் நமநமத்துப் போனது வெறும் 15 நிமிடத்தில் உரையை முடித்து அமர்ந்துக் கொண்டார் எனபது குறப்பிடத்தக்கது.
அடுத்து, மார்க்கத்தை கூட்டிக் குழப்பி உலையில் போடக்கூடிய சிறப்பு  பீரங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு சமுதாய குழப்பங்களும், சன்மார்க்க தீர்வுகளும்  வருடா வருடம் நிகழ்ச்சி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்  எவ்வளவு காலம்தான் அவ்லியாக்களைப் பற்றியே இல்லாத அருமைப் பெருமைகளைப் பேசிக்கொண்டிருப்பது இனியும் பேசினால் எடுப்படவும் போவதில்லை என்ற எண்ணத்தில் சமுதாய குழப்பங்களைப் பற்றியும் பேசாமல்  சன்மார்க்க தீர்வுகளைப் பற்றியும் பேசாமல் வழக்கம் போல் நஜாத், வஹாபி, தவ்ஹீத் என்று பேச ஆரம்பித்து விட்டார் கோவையிலிருந்து வந்திருந்த அன்சாரியா அரபிக்கல்லூரியின் முதல்வர் அப்துல் மாலிக். 

இறந்து இவ்வுலகை விட்டு மறைந்து மண்ணில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் உதவி தேடுவது பகிரங்கமான ஷிர்க் கொடிய இணை வைக்கும் செயல் என்பதை மறுத்து இறந்து போனவர்களை அழைத்து உதவி தேடலாம் அது வழிபாடுதான் என்று தனது எழுத்தின் மூலமும், பேச்சின் மூலமும், ஊடகத்தின் மூலமும் பரப்பித் திரியும் ஜமாலியின் கற்பனை கொள்கையை பேசித் திரியும் இந்த சுன்னத்வல் ஜமாஅத் மௌலவிகளும் மார்க்கத்தை குழப்பி அதன் மூலம் வயிறு வளர்க்க நினைக்கின்றனர். 

உரையை கேட்க வந்திருந்த வெறும் தாடி நரைத்தவர்களை கண்ட பேச்சாளர் இளைஞகர்களை வழி  கெடுத்துவிட்டனர், இளைஞகர்கள் வழிக்கேட்டில் இருக்கிறார்கள், இளைஞகர்களுக்கு மூளை சலவை செய்யப்பட்டிர்க்கிறது என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். 

உண்மையில் சுன்னத் ஜமாஅத் பெரியவர்களை விட இளைஞகர்கள் இந்த தவ்ஹீதின் பக்கம் அதிகம் கவரப்பட்டிர்க்கிரார்கள் என்றால் அதற்க்கு காரணம் கோயில் திருவிழாக்கள் போன்று அவ்லியாக்கள் பெயரால்  மத்ஹபுகள் பெயரால் நடக்கும் அனாச்சாரங்களை வெறுத்து வெட்கப்பட்டு  குர்ஆன், ஹதீஸின் பக்கம் திரும்பியவர்கள் இந்த இளைஞகர்கள் முன்னோர்களையும்  மூடர்களையும் பின்பற்றுவது வழிகேட?  அல்லது குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவது வழிகேட? உண்மையில் சுன்னத் ஜமாஅத் பெரியவர்கள்தான் வழிக்கேட்டில்  இருக்கிறார்கள். அவர்களுக்கு அவலியக்கள் என்றும் , வலிமார்கள்  என்றும் , அவர்களின் கராமத்துக்கள் என்றும் மூளை சலவை இன்று வரை செய்யப்பட்டு வருகிறது. 

யூத கொள்கையை அணுவளவும் பிசராமல் அப்படியே பின்பற்றுகின்ற இந்த வலிக்கேட்டின் மௌலவி கூறுகின்றார் தவ்ஹீத் வஹாபி எனபது யூதர்களின் கொள்கை என்று உண்மையில் யூதர்களின் கொள்கை  இறந்தவர்களை அடக்கம் செய்து வணங்குவதும், வழிப்படுவதும் தான் யூதர்களின் கொள்கை. ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என்று கூறும் தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கை யூதக் கொள்கையா? இறந்தவர்களுக்கு கப்ரு கட்டி இறைவனுக்கு இணைவைக்கும் சுன்னத் ஜமாத்தின் கொள்கை யூதக் கொள்கையா? அன்று இஸ்லாமிய மார்க்கத்தை அளிப்பதற்காக யூதர்கள் இஸ்லாத்தின்  பெயரால் பல கட்டுக்கதைகளை புனைந்து விட்டார்கள்.  இன்று அதே வேலையை சுன்னத் ஜமாஅத் வடிவில் மௌலீது, கந்தூரி, ஹத்தம், பாத்திஹா, புர்தா, லாதீபு, கொடியேற்றம், என்ற கொடிய ஆயுதத்துடன் யூதக் கைக்கூலியாக செயல்பட்டு வருகின்றனர். நபி ஸல்  அவர்களது மறைவுக்குப் பிறகு மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மௌலவிகள் கற்பனை செய்துள்ள சுன்னத் ஜமாஅத் , ஷாப்பி   ஹனப்பி போன்ற வழிகேடுகள் மக்கள் மத்தியில் தவ்ஹீத் ஜமாத்தால் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இவர்களின் பிரச்சாரத்தின் மூலம் செய்தானின் கொள்கையைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 

இறந்து மண்ணில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் உதவி தேடுவது பகிரங்கமான ஷிர்க் இணைவைக்கும் கொடியப் பாவ  செயல் என்று நாம் கூறுவதை மறுத்து இறந்து மண்ணில் மறைந்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதற்கு ஒரு குர்ஆன்  ஆயத்தையோ, ஆதாரப்பூர்வமான நபி மொழியையோ தராமல் முன்னோர்களின் பெயரால் மனிதக் கற்பனைகளை மக்கள் மத்தியில் திணித்து அல்லாஹ் அனுப்பிய நபிமார்கள் வஹி மூலம் அல்லாஹ்விடமிருந்து பெற்ற செய்தியை ஓதிக் காட்டும் போது மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்ட சுன்னத் ஜமாஅத் மௌலவிகள் தங்கள் முன்னோர்களின் கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டது போல் ஜமாலிப் போன்ற புரோகிதர்களின்  புரோகிதத் தொழிலுக்கு சாதகமான கருத்துக்களை அதாவது மனித யூகங்களை மார்க்கத்தின் பெயரால் செய்யும் துணிச்சல் பெற்றவர்களே இந்த சுன்னத்  ஜமாத்திரன்  வலிக்கேட்டில் சென்று நரகில் நுழைகிரவர்கலே முன்னோர்களின் செயல்பாடுகளை ஆதாரமாகக்  காட்டினர் என்பதற்கு குர்ஆனில்  2:170, 5:104, 7:28, 10:28, 21:53, 31:21, 43:22,23 போன்ற பல இடங்களில்  அல்லாஹ் கூறி இருப்பது இவர்களின் உள்ளத்தில் உரைக்காது. 

நம்மைப் படைத்து , உணவளித்து  நிர்வகித்து வரும் அல்லாஹ் ஏவியதைச் செய்ய வேண்டும், தடுத்ததைச் செய்யக் கூடாது என்ற நேர்வழி இவர்களுக்குத் தெரியவில்லை. 

சுன்னத் ஜமாத்தினர் இறந்தது போனவர்களிடம் உதவி தேடலாம் என்று கூறுவதின் மூலம் ஈமானை குப்ரினால்   மாற்றுகிறார்கள் என்பதை இந்த  2:107, 108 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன  1:175 முதல் 179 வரையுள்ள இறைவாக்குகளே இவர்களை அடையாளம் காட்டுகின்றனர்.

குர்ஆன், ஹதீஸை இமாம்களின் உதவியின்றி விளங்க முடியாது அப்படி யாராவது  விளங்க முடியும் என்று கூறினால் அவர்களுக்கு 1 லட்சம் ருபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவீனமாக பிதற்றியுள்ளார்.  இதுவெல்லாம் ஆளுக்கு தகுந்தவாறு குர்ஆணை  ஓதி கட்டணம் வசூல் செய்யும் நவீன வியாபார யுக்திகள்  
இவர்களிடம்  குர்ஆணை படித்து விளங்கும் பழக்கம் சிறிதும் இல்லை; இவர்கள் வலிக்காட்டியாகக் கொண்டுள்ள புரோகிதர் ஜமாலி போன்றவர்களின் கூற்றுகளை வேதவாக்காக(?) அப்படியே கண்மூடி ஏற்று செயல்படுகிரவர்கலாக இருக்கிறார்கள் அந்தக் குப்பைகளையே மக்களும் ஏற்று நடக்கக் கோருகிறார்கள் . அதனால்தான் குர்ஆணை  படித்து விளங்குவது எனபது இவர்களுக்கு வேம்பாக கசக்கிறது.  குர்ஆணையும், ஹதீசையும் படித்து விளங்க மறுக்கின்றனர்.

கழுதைகளையும், கட்டைகளையும் புதைத்து தர்கா கட்டிக்கொண்டு அவற்றை வசீலாவாக்குகிரார்கள். இவர்கள்  அல்லாஹ்வால் முஸ்லிம்களாக  ஏற்க்கப்படுவார்களா?
இந்திய தர்காக்களின் ஆதாரப்பூர்வமான வரலாற்றைத் தர வக்கற்றவர்கள் வாய் கிழிய பிதற்றுகிறார்கள். அதேப்போல்  குர்ஆன் 5:51 லிருந்து 56 வரை படித்து விளங்குகிறவர்கள் சுன்னத்தினர் எந்த அளவிற்கு இறைக்கட்டளையை நிராகரிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பத  அறிய முடியும். இவர்கள் குர் ஆணை படித்தால் அல்லவா நேர்வழியை அறியப்போகிறார்கள். அவர்கள் 25:50 இல் கூறப்படுவதுபோல்  குர்ஆணை முற்றிலும் புறக்கணித்து நிராகரித்து விட்டு 33:36 க்கு முரணான சுய விளக்கம் கொடுத்து வழிகேட்டில் செல்கிறார்கள்.

அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்பதை குர் ஆன் 7:3, 33:21,36,66,67,68 போன்ற பல இறைவாக்குகளும், பல ஹதீஸ்களும் நேரடியாக கூறுகின்றன  2:213, 16:44,64, 7:157, 59:7 போன்ற இறைவாக்குகள், அல்லாஹ்வின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த (52:48) நபி ஸல் அவர்களின் வழிக்காட்டலை மட்டுமே ஏற்க வேண்டும் என கூறுகின்றன . 33:66,67,68 இறைவாக்குகள் அல்லாஹ், ரசூல் அல்லாத மூன்றாமவரைப் பற்றி என்ன கூறுகின்றன என்பதை நீங்களே படித்துப் பாருங்கள். அவர்கள் வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளிவிட்டார்கள் என்று உங்களைப் போன்றவர்கள் நாளை மறுமையில் நரகில் கிடந்தது வெந்து கருகிக் கொண்டு கதறி அவர்களை சபிப்பதை இந்த இறைவாக்குகள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் சம்மட்டி அடியாகக் கூறுவதை விளங்க முடியாதவர்கள் பரிதாபத்திர்க்குரியவர்கலே.

மௌலீதை நன்மை தரும் காரியம் என்று ஓதினால் அதற்க்கு பணம், மற்றும் பிரியாணியை ஏன்  எதிர்ப்பார்க்கிறார்கள்? ஜமாலி  போன்ற தர்கா மௌலவிகள் பரகத் கூரையைப் பொத்துக் கொண்டு கொட்ட அவர்களின் வீடுகளில் ஏன் மவ்லீது ஓதுவதில்லை?  பணத்தையும் பிரியாணியையும் கேட்காமல், உங்களுக்கும் பரக்கத் கிடைக்க எங்கள் வீட்டில் வந்து மவ்லீது ஓதி விட்டுச் செல்லுங்கள் என ஜமாலி போன்றவர்களை அழைத்துப் பாருங்கள்.

அற்ப இவ்வுலக  ஆதாயங்களை எதிர்ப்பார்த்தும் , வயிற்ரை நிரப்பவும் கந்தூரி , கொடியத்தம் மவ்லீது என்று மக்களை ஏமாற்றுகிறார்களே அல்லாமல் , அல்லாஹ்வின் அச்சமோ , மரும i பயமோ , நபி ஸல் அவர்கள் மீது உண்மையான பாசமோ இல்லை என்பதை உறுதிப் படுத்துகிறது . இல்லை என்றால் ஒரு ஜான் வயிற்ரை நிரப்ப நபி ஸல் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற முர்ப்படுவார்களா ?

இறந்து மண்ணில் மறைந்தவர்களிடம் உதவி தேடுவது கூடாது; ஷிர்க், இறைவனுக்கு இணை  வைக்கும் கொடிய செயல் என்பதற்கு குர்ஆன், ஹதீஸை ஆதாரங்களைக் காட்டி நாம் கூறுகிறோம்  சுன்னத் ஜமாத்தினரோ குர்ஆன் ஹதீஸை திரித்து வளைத்து நேர்வழியை மறைத்து 2:159,161,162 இறைவாக்குகள் கூறுவதுப் போல் அல்லாஹ்வினதும், மலக்குகலதும், மனிதர்களதும், கடும் சாபத்திற்கு ஆளாகி வருகின்றார்கள். ஜமாலி போன்றவர்கள் பின்னால் செல்பவர்கள் சிந்திக்க முன்வர வேண்டும் இவர்களின் இழிநிலையை இவர்களின் பின்னால் செல்பவர்கள் விளங்கி இவர்களை புறக்கணித்து குர்ஆணையும், ஆதாரப்பூர்வமான நபி வழியையும் பற்றிப் பிடித்து அவற்றின்படி நடந்தால் மட்டுமே வெற்றி பெறுவார்கள் .

நபி ஸல் பொருட்டால், சகாபாக்கள் பொருட்டால், இமாம்கள்,  நாதாக்கள், அவ்லியாக்கள், நல்லவர்கள் பொருட்டால், அல்லாஹ் அங்கீகரிப்பானாக என்று பொருட்டால் பொருட்டால் என அடுக்குவதன் நோக்கம் படைக்கப்பட்ட மனிதர்களாகிய மேலே சொல்லப்பட்டவர்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வை விட இந்த சுன்னத் ஜமாத்தினரை அறிந்தவர்கள், அன்பு காட்டுகிறவர்கள் என்று அவர்கள் நம்புகின்றனர்.  அல்லாஹ்வின் 2:186, 50:16, 56:85 கட்டளைகளுக்கு அடிப்பணிந்து அவனிடமே நேரில் கேட்டால் தரமாட்டார்கள். இவர்களின் பொருட்டால் கேட்டால் மட்டுமே தருவான் என்ற சுன்னத் ஜமாத்தினரின் குப்ரான, ஷிர்க்கான மூட நம்பிக்கையே  ஆகும்.

உலகில் எம்,எள்,எ மந்திரி போன்றோரின் பரிந்துரை மூலம் பிரதமருக்கு அறிமுகமாகி நெருங்குவதைப் போல் சுன்னத் ஜமாத்தினர்,  நல்லோர்கள் நாதாக்கள் அவ்லியாக்கள் போன்றோரின் பொருட்டால் என்ற பரிந்துரை மூலம் அல்லாஹ்வுக்கு அறிமுகமாகி அவனின் நெருக்கத்தைப் பெறலாம் என கனவு காண்கின்றனர். மனிதராகிய பிரதமரைப் போல் பிறரின் அறிமுகத்தை வைத்தே ஆட்களின் தராதரத்தை அறியும் நிலையில் அல்லாஹ்வும் இருக்கிறான் என்கின்றனர் சுன்னத் ஜமாத்தினர். அதாவது சர்வ வல்லமை மிக்க முக்காலமும் அறிந்த அல்லாஹ்வை அற்ப அறிவுள்ள மனித நிலைக்குத் தாழ்த்துகின்றனர்.

49:16 இல் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக்கொடுக்க முற்ப்பட்டுள்ளனர் சுன்னத் ஜமாத்தினர். 42:21 இல் கூறுவது போல் ஜமாலி போன்றவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக்கி குப்ர், ஷிர்க்கில்  மூல்கின்றனர். அல்லாஹ் மார்க்கமாக்காததை அல்லாஹ்வின் இறுதித் தூதர் மார்க்கமாக்காததை மார்க்கம் என்று அதாவது நற்செயல்கள் என்று இறந்தோரிடம் உதவி தேடுவது கந்தூரி, மவ்லீது இன்னும் இவை போன்ற பித்அத்துக்களை அரங்கேற்றுகிறவர்கள் குப்ர், ஷிர்க் பித்அத்களில் மூழ்கி நாளை நரகை நிரப்ப இருக்கிறார்கள் என்பதை எடுத்து காட்டப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களை படித்துப் பார்த்துச் சிந்தித்து விளங்குகின்றவர்கள் மட்டுமே உணர்ந்து தவ்பா செய்து மீளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

ஒலியுல்லாவின் பெயரால் நடந்த வழிகேட்டில் கலந்து கொண்டவர்களுக்கு  எமது அன்பான  வேண்டுகோள்!
மார்க்கத்தையே வாயிற்று பிழைப்பாகக் கொண்ட மௌலவிகளை புறந்தள்ளிவிட்டு குர்ஆணையும் , ஆதாரப்பூர்வமான நபிவழியையும் பற்றிப்பிடித்து அவற்றின்படி நடக்க முன் வாருங்கள்  இதுவே  நேர்வழி , இந்த  மௌலவிகளைப் பின்பற்றுவது நம்மை நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை 7:3, 33:36,66,67,68 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. இஸ்லாத்தை தூய்மையான முறையில் அறிந்து அதன்படி நடந்து , அல்லாஹ் நம் அனைவரையும் நரகை விட்டுக் காப்பாற்றி அருள்வானாக....         

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மௌலானா ஒலியுல்லாவின் கொடி இறக்க நிகழ்ச்சியும்! மார்க்க பீரங்கிகளின் சொற்ப்பொழிவு பேச்சும்!! Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top