FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, December 22, 2010

தர்காவின் பெருவிழா!! இணை வைப்பாளர்களுக்கு திருவிழா!!!

Wednesday, December 22, 2010
4:30 PM


ஜின்னையும்மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர(வேறு எதற்காகவும்) நான்படைக்கவில்லை.
(அல்குர்ஆன் 51 : 56)
அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனிதர்களாகிய நம்மை படைத்திருக்கிறான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக்கொள்ளலாம்ஆனால் உண்மையான இஸ்லாத்தை பின்பற்றுகின்ற மக்களுக்கு மத்தியில் ஸைத்தானிய அடிச்சுவடுகளை சிறிதும் பிசகாமல் பின்பற்றுகின்ற பரேலவி மதத்தினரால் சமாதி வழிபாடுதாயத்துதகடுகள்போன்ற எண்ணற்ற இணைகற்பிக்கின்ற காரியங்கள் புகுந்து விட்டனஆனால் சத்தியத்தை யாருக்கும் அஞ்சாது எடுத்துரைக்கின்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிர பிரச்சாரத்தின் காரணத்தினால் சைத்தானிய சக்திகளான கப்ரு வணங்கி பரேலவிகளின் சிலந்திக் கோட்டைகள்  தகர்த்தெறியப்பட்டுள்ளது.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம்அது பொய்யைநொறுக்குகிறதுஉடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி)நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.
 (அல்குர்ஆன் 21 : 18)
இன்றைக்கு அதிகமான மக்கள் சத்தியத்தை விளங்கி உண்மையானஇஸ்லாத்தைப் பின்பற்றத் துவங்கிவிட்டார்கள்இதனால் முஸ்லிம்களைப் போன்றுவேடமிடும் கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர் நாங்கள் கப்ரை வணங்கவில்லை.கப்ரு ஸியாரத்தைத்தான் செய்கிறோம் என்று கப்ரு வணக்கத்திற்கும் கப்ருஸியாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்கள் செய்கின்ற விபச்சாரத்தைதிருமணமாகக் காட்டியுள்ளனர்விபச்சாரத்தை விட மோசமான இணை கற்பிக்கின்றமாபாவமாகிய கப்ரை வணங்கும் காரியங்களான சமாதிகளை கட்டி அதற்குவிழாக்கள் எடுப்பதுஊர்வலம் நடத்துவதுசமாதியில் சந்தணம் பூசுவது,மாலையிடுவதுமரியாதை செய்வதுமவ்லூது பஜனைகள் பாடுவதுநேர்ச்சைகள்வழங்குவதுசமாதிகள் பெயரில் சினிமாப்பாட்டுகளை இசையுடன் பாடி கச்சேரிநடத்துவதுயானை என்ற மிருகத்துடன் பரேலவியிஸ மாக்களும் சேர்ந்துமிருகங்கள் ஊர்வலம் செல்வது, சமாதியில் முறையிடுவதுஉண்டியல் வைத்துவசூலிப்பது போன்றவையும் உண்மையான இஸ்லாத்தில் இணைகற்பிக்கின்றகாரியங்களே என்பது இஸ்லாத்தை படிக்காத கப்ரை வணங்கும் பரேலவியிஸமதத்தினருக்கு விளங்கவில்லை.

உண்மையான இஸ்லாத்தில் கைதட்டுவது சீட்டியடிப்பது போன்றவைதொழுகையாகக் கருதப்படாதுஇதையே பரேலவிகளைப் போன்று அல்லாஹ்வைநம்பிய மக்கா காஃபிர்கள் தாங்கள் வணங்கிய சிலைகளுக்குச் செய்ததால்அக்காரியங்களை அவர்களுடைய தொழுகையாகவே அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

சீட்டியடிப்பதும்கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) இந்த ஆலயத்தில்அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை''நீங்கள் (ஏக இறைவனை)மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்)
 (அல்குர்ஆன் 8 : 35)
இது போன்றே கப்ரை வணங்கும் பரேலவிகள் செய்யும் மேற்கண்டகாரியங்களும்இறைவனுக்கு இணைகற்பிக்கும் கப்ரு வணக்கமாகவே கருதப்படும்.
அகில உலகையும் படைத்துகாத்துபராமரிக்கும் ஒரே ஒரு இறைவனைஅல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது''அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை;எதுவும் இல்லை'' என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும்ஒரே இறைவனாகியஅல்லாஹ்வுடைய பண்புகள் ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல்மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும்அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில்எந்தவொன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் என்றுஇஸ்லாம் கூறுகிறது.

இவ்வாறு இறைவனுக்கு இணை கற்பித்தல்மனிதர்கள் செய்கின்றகுற்றங்களிலேயே மிகவும் பெரிய குற்றம் எனவும்இக்கொள்கையிலிருந்துதிருந்திக் கொள்ளாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை;என்றென்றும் நரகத்தில் கிடப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

இனி பரேலவிகள் கப்ரை வைத்துக் கொண்டு செய்யும் காரியங்கள் கப்ருவணக்கமே என்பதற்கான சான்றுகளைப் பார்ப்போம்

இறந்தவர்களை இறைநேசர்கள் (அவுலியா) என்று தீர்மானிப்பதுஇணைவைத்தலே

புத்தன் துறையைச் சேர்ந்த பரேலவி மதத்தினர் அல்ஆரிபு ஃபில்லா என்றபெயருடைய ஒருவரை இறைநேசர் என்றும் மகான் என்றும் கூறுகின்றனர்.இவ்வாறே ஒவ்வொரு தர்ஹாவில் உள்ளவர்களையும் கூறுகின்றனர்இவர்கள்அவுலியா எனக் கூறுபவர்களில் சில குரங்களும்யானையும்அணில்களும்கட்டைபீடி மஸ்தான்களும்அறுபதடி பாவாக்களும் அடங்கியுள்ளனர்.

அல்லாஹ்வும்அல்லாஹ்விடமிருந்து இறைச்செய்தி பெற்றதின்அடிப்படையில் இறைத்தூதரும் யாரையெல்லாம் சுவர்க்கவாசிகள் என்றும்நரகவாசிகள் என்றும் கூறியுள்ளார்களோ அவர்களைத் தவிர வேறு யாரையும் அவர்மரணித்த பிறகு இவர் சுவர்க்க வாசிதான் அல்லது இவர் நரகவாசிதான் என்றுதீர்மானிக்கக் கூடிய அதிகாரம் வேறு யாருக்கும் கிடையாதுஇறைத்தூதர்கள் கூடஇறைவன் அவர்களுக்கு அறிவித்தவர்களை மட்டும்தான் கூறமுடியுமே தவிர வேறுயாரையும் அவர்களாக தீர்மானிக்க முடியாது.

கவனத்தில் கொள்கஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும்இல்லைஅவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.அவர்கள் (இறைவனை)நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.
 (அல்குர்ஆன் 10 : 6263)
இறைநம்பிக்கைஇறையச்சம் கொண்ட அனைவரும் இறைநேசர்களே எனமேற்கண்ட வசனம் கூறுகிறதுஒருவனுடைய உண்மையான இறையச்சத்தையும்,இறைநம்பிக்கையையும் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறியமுடியாது.நபியவர்களுக்கு கூட இந்த அதிகாரம் கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''மக்களின்இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப்பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை''
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)   (புகாரி 4351)
இதனை பின்வரும் ஹதீஸிலிருந்தும் விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தஅன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலிரி) அவர்கள் கூறியதாவது:
(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவதுஎன்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்தபோது உஸ்மான் பின்மழ்வூன் (ரலிரி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானதுஅதன்படிஅவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம்பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார்.அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபி (ஸல்)அவர்கள் அங்கு வந்தார்கள்நான் (உஸ்மானை நோக்கி), '''ஸாயிபின் தந்தையே!உம்மீது இறையருள் உண்டாகட்டும்அல்லாஹ் உம்மைக்கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்'' எனக்கூறினேன்உடனே நபி (ஸல்) அவர்கள்  ''அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதுஉனக்கெப்படித் தெரியும்?'' என்று கேட்டார்கள்'''அல்லாஹ்வின் தூதரேஎன் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்பின்யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்? '' என நான் கேட்டேன்அதற்குநபி(ஸல்) அவர்கள், '''இவர் இறந்துவிட்டார்எனவே அல்லாஹ்வின் மீதாணையாக!இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன்ஆயினும் நான்அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பதுஎனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்அல்லாஹ்வின் மீதாணையாகஅதற்குப்பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.
 (புகாரி 1243)
உஸ்மான் பின் மழ்வூன் (ரலிஅவர்கள் மிகச் சிறந்த சஹாபிஹிஜ்ரத்செய்தவர்அவர் மரணித்த பிறகு அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்திவிட்டான்என்று தீர்மானிப்பதை நபியவர்கள் கண்டிக்கிறார்கள்ஒருவன் எவ்வளவுநல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நிலை என்னவென்பதைஅல்லாஹ் ஒருவன்தான் அறிந்தவன்அவனைத் தவிர வேறு யாரும் அறியமுடியாது.

நம்முடைய பார்வைக்கு ஒருவன் நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்தபிறகு அவன் நல்லவன்தான் என நாம் தீர்மானிக்க முடியாது என்பதை மேற்கண்டஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றனபின்வரும் ஹதீஸ் இதனை நூறு சதவிகிதம்உறுதிப்படுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் , ''மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்)செயலைச் செய்து வருவார்.ஆனால்அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார்மக்களின் வெளிப்பார்வைக்குஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்துவருவார்ஆனால், (உண்மையில்)அவர் சொர்க்கவாசியாக இருப்பார்''.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சாஇத் (ரலி)  நூல் : புகாரி (2898)

ஒருவர் மரணித்த பிறகு அவரை மகான்தான்நல்லவன்தான்அவுலியாதான்,சுவர்க்கவாசிதான் என்று தீர்மானிக்கின்ற அதிகாரம் இறைவனுக்கு மட்டுமேஉரியதாகும்இதற்கு மாற்றமாக இறை அதிகாரத்தை கையிலெடுத்து ஆரிபுஎன்பவரையும்முஹைதீன் என்பவரையும் அனைத்து தர்ஹாக்களில்அடக்கப்பட்டவர்களையும் யானைகளையும்குரங்குகளையும்கட்டைப்பீடிமஸ்தான்களையும் இந்த பரேலவி மதத்தினர்  அவுலியாக்கள் என்று தீர்மானித்ததுஇறைவனுக்கு இணைகற்பிக்கின்ற காரியமேஇதை உண்மையான முஸ்லிம்கள்தெளிவாக விளங்கியுள்ளனர்.

கப்ரைக் கடவுளாக்கிய பரேலவி மதத்தினர்
பிரார்த்தனை என்பது வணக்கமாகும் அதை அல்லாஹ்வைத் தவிர வேறுயாருக்கும் செய்வது கூடாதுஅல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனைசெய்தால் நாம் அவர்களை கடவுளாக எடுத்துக் கொண்டோம் என்பதே அதன்பொருளாகும்
'
பிரார்த்தனை தான் வணக்கமாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்)கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்நுஃமான் பின் பஷீர்(ரலிநூல்கள்அஹ்மத்திர்மிதீஹாகிம்,அபூதாவூத்

வணக்கங்களில் சிறந்தது எதுவென நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ''ஒரு மனிதன் தனக்காகஇறைவனிடம் செய்யும் பிரார்த்தனையாகும்'' என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா(ரலிநூல்அல்அதபுல் முப்ரத்

''பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கதுவேறொன்றுமில்லை'' எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அருளியுள்ளனர்.
அறிவிப்பவர்அபூஹுரைரா(ரலிநூல்ஹாகிம்
இந்த நபிமொழிகள் யாவும் பிரார்த்தனை என்பது ஒரு வணக்கம் என்று கூடச்சொல்லாமல் வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் எனத் தெளிவாகஅறிவிக்கின்றன'துஆ என்பது தலையாய வணக்கம் என நிரூபணமாகும் யார்இறைவனல்லாத மற்றவர்களைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள்இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாகவே இறைவனால் கருதப்படுவர்.லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிரயாருமில்லை) என்பதிலும் இவர்களுக்கு நம்பிக்கையில்லை.
எனவே கப்ரிடம் பிரார்த்தனை செய்யும் பரேலவி மதத்தினர் கப்ருவணங்கிகளே.

கப்ரில் உள்ளவர் கேட்கிறார் என நம்புவதால் கப்ரை கடவுளாக்கியபரேலவிகள்
எங்கிருந்து அழைத்தாலும் எந்த மொழியில் அழைத்தாலும் எப்போதுஅழைத்தாலும் செவியேற்று பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிரவேறுயாருக்கும் கிடையாதுஅல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அவ்வாற்றல்இருப்பதாக நம்புபவர்கள் இறைவணக்கத்தை இறைவனல்லாத மற்றவர்களுக்குச்செய்வதர்களாவர்இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள்அணுவளவும்அதிகாரம் படைத்தவர்களல்லர்நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள்அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள்செவியேற்றார்கள் என்றுவைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள்கியாமத் நாளில்நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள்நன்கறிந்தவனைப்போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
 (அல்குர்ஆன் 35:13,14)
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள்உங்களைப் போன்ற அடிமைகளேநீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்அவர்களை அழைத்துப் பாருங்கள்அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
(அல்குர்ஆன் 7:194)
செத்தவன் செவியேற்க மாட்டான் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாகஅறிவிக்கின்றன.
ஆனால் பரேலவி மதத்தினர் ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கானோர் கப்றுக்குமுன்னால் நின்று கேட்கின்றனர்கப்ரில் உள்ளவர் அனைவரின் கூற்றையும்கேட்கிறார் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு பிரார்த்திக்கின்றனர்மேலும்எங்கோ வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற ஒரு பரேலவி மதத்தைச் சார்ந்தவன் தமிழேதெரியாத என்றைக்கோ இறந்து பக்தாதில் அடங்கி மண்ணோடு மண்ணாகி விட்டமுஹைதீன் என்பவரை அழைக்கின்றார்எங்கிருந்து அழைத்தாலும்எந்த மொழியில்அழைத்தாலும் செத்தவன் கேட்கின்றான் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறுசெய்கின்றனர்முஹைதீனை ஆயிரம் தடவை அழைத்தால் அவர் கண்ணெதிரேவருவார் என்றும் மொளிலிதுகளில் எழுதிவைத்துள்ளனர்.
எங்கிருந்து அழைத்தாலும் எந்த மொழியில் அழைத்தாலும் எப்போதுஅழைத்தாலும் செவியேற்று பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிரவேறுயாருக்கும் கிடையாது.  இவ்வாற்றல் கப்ர் என்ற குளமண் சுவருக்கு இருப்பதாகநம்புவதால் பரேலவிகள் கப்ரு வணங்கிகளே.

கப்ரு கடவுளிடும் உதவி தேடும் பரேலவி மதத்தினர்
(அல்லாஹ்வே) உன்னையே வணங்குகிறோம்உன்னிடமே உதவியும்தேடுகிறோம்.
(அல்குர்ஆன் 1 : 4)
மிகைத்தவனும்ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிரஎந்த உதவியும் இல்லை.
 (அல் குர்ஆன் 3126)
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர்எவருமில்லைஅவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின்உங்களுக்கு உதவி செய்பவன் யார்நம்பிக்கை கொண்டோர்அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
 (அல் குர்ஆன் 3160)
நபி (ஸல்) கூறினார்கள் நீ எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள்.நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டு (மட்டுமே) உதவி தேடு.
அறிவிப்பவர் : இப்னு  அப்பாஸ் (ரலிநூல் : திர்மிதி 2440)
அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடும்படி மேற்கண்ட வசனங்களும்ஹதீஸ்களும் நமக்குக் கற்றுத் தருகின்றனஎனவே உதவி தேடுதல் என்பதுவணக்கமாகும்
 இந்தப் பரேலவி மதத்தினர் இறைவனிடம் மட்டுமே உதவி தேடவேண்டும்என்பதின் சரியான பொருளை திரிக்கின்றனர்.
''நன்மையான காரியங்களிலும் இறையச்சத்தை ஏற்படுத்தும்காரியங்களிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!'''
(அல்குர்ஆன் 5:2)
இந்த வசனத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதைஅல்லாஹ் அனுமதிக்கின்றான்வலியுறுத்தவும் செய்கிறான்.
எனவே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வதையும் மனிதர்களைமனித நிலையில் வைத்து உதவி தேடுவது இணைவைத்தலாகாதுமாறாக மனிதனைஇறைவனது அம்சம் பொருந்தியவனாகக் கருதும் விதமாக உதவி தேடுவது மட்டுமேஇணைவைத்தலாகும்கப்ரில் அடங்கி மண்ணோடு மண்ணாகிவிட்ட ஒருவரைஒருவன் அழைத்து உதவி தேடும் போது அவர் இறைவனது அம்சம் கொண்டவராகநம்பப்படுகிறார்.
எங்கிருந்து அழைத்தாலும் எந்த மொழியில் அழைத்தாலும் எப்போதுஅழைத்தாலும் செவியேற்று பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிரவேறுயாருக்கும் கிடையாது.  இவ்வாற்றல் கப்ர் என்ற குளமண் சுவருக்கு இருப்பதாகநம்புவதாலும எவ்வித உபகரணங்களும் இல்லாமால் நோய் நீக்குதல்  குழந்தைபாக்கியத்தை அளித்தல் போன்ற ஆற்றல்கள் இறைவனுக்கு இருப்பதைப் போன்றுகப்ருக்கு இருப்பதாக நம்பி இறைவனிடம் மட்டுமே முறையிட வேண்டியவற்றைகப்ரிடம் முறையிடம் பரேலவிகள் கப்ரு வணங்கிகளே.

கப்ருக்கு அறுத்துப் பலியிட்டு நேர்ச்சை செய்யும் கப்ரு வணங்கிகள்
உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
(அல்குர்ஆன் 108 : 2)
இந்த வசனத்தில் இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும்அவனுக்காகமட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
தொழுகை எப்படி வணக்கமோ அதுபோல் அறுத்துப் பலியிடுவதும்வணக்கமேதொழுகைகளை எப்படி இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாதோ,அதுபோல் அறுத்துப் பலியிடுவதையும் இறைவனல்லாத எவருக்கும் செய்யக்கூடாது என்று இங்கே தெளிவுபடுத்தப்படுகின்றது.
''யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ,அவனை அல்லாஹ் லஃனத் செய்கிறான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்அலீ(ரலி)  நூல்முஸ்லிம் (4001)
''யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோஅதைஅவர் நிறைவு செய்யட்டும்யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில்நேர்ச்சை செய்கிறாரோஅதை நிறைவேற்றலாகாது'' என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா(ரலி)  நூல்புகாரி (6696)
அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் உயிரே போய்விடும் என்றநிலை ஏற்பட்டாலும்எதனையும் பலியிடக் கூடாதுஅற்ப  போன்ற மதிப்பற்றஉயிரினங்களைக் கூடஅல்லாஹ் அல்லாதவர்களுக்கு பலியிடக் கூடாது நேர்ச்சைசெய்யக்கூடாது  என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றது.
நேர்ச்சையும் அறுத்துப் பலியிடலும் ஒரு இபாதத் வணக்கம் என்பதை எவர்அறியவில்லையோஅதன் படி நடக்கவில்லையோஅவர்கள்இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாக ஆகி நிரந்தர நரகத்திற்கு தகுதிபெறுகிறார்கள்.
எனவே கப்ருகளுக்கு அறுத்துப் பலியிடுதல் நேர்ச்சை செய்தல் என்றவணக்கங்களை செய்யும் பரேலவி மதத்தினர் கப்ரு வணங்கிகளே .



சந்தணத்தையும்கொடிக்களைகளையும்நெருப்பையும்வணங்கும் பரேலவிகள்


பரேலவி மதத்தினர் அவர்களுடைய வணக்கத்தலங்களாகிய தர்ஹாக்களில்அவர்கள் கடவுளாக வணங்கும் கப்ருகளுக்கு சந்தணத்தைப் பூசுகின்றனர்முஸ்லிம்அல்லாதவர்கள் கற்சிலைகளுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்கின்றனர்அதுபோன்று கற்சிலையை விட கீழ் நிலையில் உள்ள குளமண் சுவர்களான கப்ருகளுக்குசந்தண அபிஷேகம் செய்வதால் சந்தணம் பூசுதல் என்பது இணைகற்பிக்கின்றகாரியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லைஅது போன்ற கப்ருகளில் பூசப்பட்டசந்தணம் தங்களுக்கு பரக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அதனைகழுத்துகளில் பூசிக்கொள்கின்றனர்இறைவனல்லாத ஒரு பொருள் இறைவனைப்போன்று நமக்கு நன்மை ஏற்படுத்தும் என நம்பிக்கை வைப்பதால் இதுவும்இணைகற்பிக்கின்ற காரியமே.

அது போன்று தர்ஹாக்களில் விளக்குகளை ஏற்றிவைத்து அந்த நெருப்பைதொட்டு முத்தமிடுகின்றனர்அதற்கு விளக்கு ராத்திரி என்றும் பெயர் வைத்துள்ளனர்.இவ்வாறு செய்வதால் துன்பங்கள் நீங்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர்இதேநம்பிக்கையில்தான் கொடிக்களைகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர் நமக்குதுன்பத்தையும்இன்பத்தையும் ஏற்படுத்தக்கூடியவன் அல்லாஹ் ஒருவன்மட்டும்தான்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதைநீக்குபவன் யாருமில்லைஉமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனதுஅருளைத் தடுப்பவன் யாரும் கிடையாதுதனது அடியார்களில் நாடியோருக்குஅதை அளிப்பான்அவன் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்.
 (அல்குர்ஆன் 10 : 107)
நெருப்பும்கொடிக் களைகளும் இறைவனைப் போன்று இன்ப துன்பங்களைதரக்கூடியவை என பரேலவி மதத்தினர் நம்பிக்கை வைத்திருப்பதால் கொடிஊர்வலமும்தர்ஹாக்களில் விளக்கேற்றுவதும் இணைகற்பிக்கின்ற காரியங்களேஎன்பதை உண்மையான முஸ்லிம்கள் தெளிவாக விளங்கியுள்ளனர்.

பஜனை பாடுவதும் உண்டியல் வைப்பதும் இணைகற்பித்தலே
கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர் தங்களுடைய வணக்கதலங்களிலேதங்களுடைய கடவுளாகிய கப்ரில் அடக்கம் செய்யபட்டவரை புகழ்ந்து பஜனைகளைபாடுகின்றனர்இந்த பஜனைகள் அனைத்துமே இறைவனுடைய பண்புகளைஇறைவனின் அடிமைகளுக்கு வழங்கி அவர்களை கடவுளாக வழிபடக்கூடியபாடல்களாகவே அமைந்துள்ளனஇதற்கு ஒரு சிறிய உதாரணமாக அனைவரும்அறிந்த யாகுத்பா என்ற பஜனையில் இடம் பெற்ற ஒரு கருத்தைக் கூறலாம்அதாவதுபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து பாக்தாத்தில் மரணமடைந்த முஹைதீன்அவர்களை யார் எங்கிருந்து எந்த மொழியில் எந்த நேரத்திலும் முஹைதீனே வந்துவிடுங்கள் என்று ஆயிரம் தடவை அழைத்தால் அவர் கண்முன்னே காட்சி தருவார்என பாடுகின்றனர்நபிமார்களின் உடல்களைத் தவிர மற்றவர்களின் உடல்களைமண் சாப்பிட்டுவிடும் என்று நபியவர்கள் கூறியுள்ளனர்ஆனால் மண்ணோடுமண்ணாகிவிட்ட முஹைதீன் என்பவர் இறைவனைப் போன்று ஆற்றலுள்ளவர் எனபரேலவி மதத்தினர் பஜனை பாடுவதாலும் இவர்களுடைய பஜனைகள் அனைத்தும்இவ்வாறு அமைந்துள்ளதாலும்இந்தப் பஜனைகளை இறந்தவர் கேட்கிறார் என்றநம்பிக்கை வைத்திருப்பதாலும் பஜனைகள் பாடுவது இணைகற்பிக்கின்ற காரியமே.

இது போன்றே நாம் எந்த ஒன்றை செலவு செய்தாலும் இறைவனுக்காகமட்டுமே செலவிடவேண்டும்இறைவனைத் தவிர மற்றவர்களின் திருப்திக்காகவோஅவர்கள் தனக்கு அருள்புரிய வேண்டும் என்ற நம்பிக்கையிலோ ஒருவன் மக்களுக்குவாரியிறைத்தாலும் உண்டியலில் போட்டாலும் அக்காரியம் இணைகற்பிக்கின்றகாரியமே.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக அல்லாஹ் அவனுக்காகமனத்தூய்மையுடனும் அவனுடைய திருமுகத்தை நாடியும் செய்கின்றசெயலைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலிநூல் : நஸயீ (3089)
ஆனால் பரேலவி மதத்தினர் தங்களுடைய கப்ருக் கடவுளின்திருப்திக்காகவும்அருளுக்காவும் உண்டியல் வைத்து வசூலித்துகொள்ளையடிப்பதால் தர்ஹாக்களில் வைக்கப்பட்ட உண்டியல்களில் காசுபோடுவதும் இணைகற்பிக்கின்ற காரியமே.
பரேலவி மதத்தினர் கப்ரை வணங்குகிறார்கள் என்பதற்கு இன்னும்பலசான்றுகள் உள்ளனயகூதிநஸராக்களின் கலாச்சாரமாகிய இந்த சமாதிவழிபாட்டை ஒழிப்பதற்காகத்தான் நபியவர்கள் பின்வரும் எச்சரிக்கைகளைகூறியுள்ளார்கள்.

கப்ரை கட்டுவதுபூசுவது கூடாது!
நபி(ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீதுஉட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்ஜாபிர் (ரலி)  நூல்முஸ்லிம் (1610)

உயர்த்தப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்குதல்
அபுல் ஹய்யாஜ் அல் அஸதி அறிவிக்கிறார்கள் :
அலி(ரலிஅவர்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன். எந்த சிலையையும் அதனை அழிக்காமலும் எந்தக் கப்ரையும் அதனைத் தரைமட்டம் ஆக்காமலும் விட்டு விடாதே! என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (1609)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :   உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.
அறிவிப்பவர் : ஃபழாலா பின் உபைத் (ரலி)  நூல் : அஹ்மது : (22834)

அல்லாஹ்வின் சாபம்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :  யகூதிநஸராக்களை அல்லாஹ் சபித்துவிட்டான். (ஏனென்றால்) தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை தர்ஹாக்களாக எடுத்துக் கொண்டனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)     நூல் : புகாரீ (1330)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :  உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் சமாதிகளை தர்ஹாக்களாக ஆக்கிக் கொண்டார்கள். நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கிறேன்.
அறிவிப்பவர் : சுன்துப் (ரலி)  நூல் :  முஸ்லிம் (827)

படைப்பினங்களிலேயே மோசமானவர்கள்
அறிந்து கொள்ளுங்கள்மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை தர்ஹாக்களாக ஆக்கிக் கொண்டவர்கள்தான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉபைதா(ரலி)  நூல் அஹ்மத் (1599)
எனவே சாபத்தை தரும் இந்த சமாதி வழிபாட்டை புறக்கணிப்போம்.சத்தியத்தை நோக்கி அணிதிரள்வோம்.
''உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக!
(அல்குர்ஆன் 17:81)

Thanks to Abdun Nasir MISc

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தர்காவின் பெருவிழா!! இணை வைப்பாளர்களுக்கு திருவிழா!!! Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top