FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, December 26, 2014

இறைவசனத்தின் மீது சாணியடித்த மவ்லிது அடிமைகள் ! ! !

Friday, December 26, 2014
5:51 PM
 
அடியக்கமங்கலத்தில் கபூர் வணங்கிகளின் கைவரிசை ! ! !
இறைவசனத்தின் மீது சாணியடித்த மவ்லிது அடிமைகள் ! ! !




அடியக்கமங்கலத்தில் ஓதப்பட்டுவரும் மவ்லிதுக்கும்  இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக 26-12-2014 இன்று காலை பெரிய பள்ளிவாசல் அருகில் இருக்கும் TNTJ அனுமதி பெற்ற போர்டில் குர்ஆன் & ஹதிஸ் எழுதப்பட்டது.

இதை பொறுத்து கொள்ள முடியாத மவ்லிது அடிமைகள் இறைவசனத்தின் மீதும் நபிகளாரின் பொன்மொழி மீதும் சாணியை பூசி உள்ளனர். மவ்லிது இஸ்லாத்தில் கூடும் என்று ஆதாரத்தை காட்டி நிருபிக்க திராணியில்லாத கோழைகள் தங்களை எதிர்பதாக நினைத்துக்கொண்டு அல்லாஹ்விடம் மோதியுள்ளனர்.

இவர்களுக்கு நாம் கூறிக்கொள்வது திருக்குர்ஆனில் அல்லாஹ் எச்சரிக்கிறான்...

#திருக்குர்ஆன்:

தெளிவான வசனங்களை (முஹம்மதே!) உமக்கு அருளினோம். குற்றம் புரிவோரைத் தவிர (யாரும்) அதை மறுக்க மாட்டார்கள். (2.99)

நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.  (4:56)

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் குற்றம் செய்து கொண்டிருந்ததால் வேதனை அவர்களை வந்தடையும். (6:49)

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதுவோரை அவர்கள் அறியாத விதத்தில் விட்டுப் பிடிப்போம். (7:182)

அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோருக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். துன்புறுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு (16:104)

(நம்மை) மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரே நரகவாசிகள். (5:10)


#இதற்கு அஞ்சி அல்லாஹ்வின் மார்க்கத்தை முறையாக பின்பற்றுவார்களா ???

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான் (9:32)



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இறைவசனத்தின் மீது சாணியடித்த மவ்லிது அடிமைகள் ! ! ! Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top