அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26-11-2011 சனிக்கிழமை மாலை சரியாக 4:00 மணியளவில் பெண்கள் பயான் தவ்ஹீத் மர்க்கஸில் நடைப்பெற்றது.அதே தினத்தில் மிகவும் அருகில் உள்ள மெளலானா பாவா தர்காவில் கொடியேற்றம் விழா ஏற்பாடு செய்யப்பட்டுவந்தது.
ஆலிமா அவர்கள் தர்கா வழிபாடு பற்றி மிகவும் துள்ளியமாக எடுத்துகூறினார்.அவரது உரையில் சந்தனம் பூசூவது,கூடு எடுப்பது,கொடியேற்றுவது ஆகிய தீமைகளை ஆதாரங்களுடன் எடுத்து கூறினார்.ஆனால் அசத்தியவாதிகள் செய்தது என்ன தெரியுமா? "எங்கே மக்கள் இந்த சொற்பொழிவை கேட்டுவிடுவார்களோ,கூட்டம் வராமல் போய்விடுமோ,உண்டியல் வசூல் குறைந்துவிடுமோ என்று அஞ்சி பாட்டை ஒளிபெருக்கி மூலம் பாடவைத்தனர்".
இதையும் மீறி நமது ஒளிபெருக்கி மூலம் பயான் சிறப்பாக நடந்தது.இதனால் ஆபத்து வருமே என்று கூட அஞ்சாமல் தீமையை தடுக்கவேண்டும் என்ற ஒரே நோகத்தோடு இந்த தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்...
"உண்மை வந்து விட்டது,பொய் அழிந்து விட்டது.பொய் அழியக் கூடியதாகவே உள்ளது"என்றும் கூறுவீராக!"
அல்-குர்ஆன்-17:81