அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இந்த வருடத்திற்கான கோடைக்கால பயிற்சி
முகாம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக 10-05-2014 அன்று காலை சரியாக 9.30 மணியளவில் துவங்கியது.பள்ளி கட்டுமான பணி நடைபெறுவதாலும் போதிய இட வசதி இல்லாத காரணத்தினாலும் ஆண்களுக்கு மட்டும் கோடைக்கால பயிற்சி முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.இந்த கோடைக்கால பயிற்சி முகாம் நடத்துவதற்கு பல பொருளாதார சிக்கல் இருந்தாலும் போன வருடம் நடத்தியது போல் இந்த வருடமும் தொய்வில்லாமல் நடத்துவதற்காகவும், மாணவர்களுக்கு தூய்மையான இஸ்லாத்தை கற்றுக்கொடுப்பதற்காகவும் இந்த வருடத்திற்கான கோடைக்காலப் பயிற்சி முகாம் நடைப்பெற்று வருகிறது . அல்ஹம்துலில்லாஹ் ,,,,