அல்லாஹ்வின் மாபெரும் உதவியால்...07/11/2011 அன்று காலை சரியாக 7:45 மணிக்கு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்தில் நபி வழி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது.
ஆண்கள் பகுதி
பெண்கள் பகுதி
அனைவரும் தங்களது வாழ்த்துகளை பறிமாறி கொண்டனர்.
நமது ஜமாஅத் சார்பாக திடல் தொழுகை ஏற்பாடுகள் 06/07/2011 ஞாயிறு அன்றே
செய்யப்பட்டுவந்தன.ஆனால் ஹஜ் பெருநாள் காலையில் 5:30 மணியில் இருந்து மழை பொழிந்தன.உடனே பள்ளிவாசல் உள்ளே தொழுகையை நடத்திவிடலாம் என்று சகோதரர்கள் முடிவை மாற்றினர்.ஆனாலும் திடல் தொழுகை என்கிற சுன்னத் விடுபட போகிறதே என்ற வருத்தம் அனைவருக்கும் இருந்தது.ஆனால் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மழை 6:30க்கு ஓய்ந்தன.உடனே சகோதரர்கள் 7:15 மணிக்கு கலத்தில் இரக்கப்பட்டு திடல் தொழுகையை வெரும் 10 நிமிடங்களில் தார் பாய்களை விரித்து,பாய்கள் போட்டு ஏற்பாடு செய்தனர்.
சுன்னத்து தானே என்று எந்து ஒரு சூழ்நிலையிலும் சுன்னத்தை விடமல் பேணி வரும் ஒரே ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் என்பது அடியக்கமங்கலத்தில் நிருபனமாயிற்று...அல்ஹம்துலில்லாஹ்!
ஆனால் அடியக்கமங்கலத்தில் நாங்களும் தவ்ஹீத் ஜமாஅத் தான் என்று கூறி வரும் சுமையா டிரஸ்ட் வாதிகள் திடல் தொழுகைக்காண எந்த ஒரு முயற்ச்சியும் எடுக்கவில்லை ஏன் எடுக்கவில்லை என்றால் திடல் சேராக இருக்கிறது என்று மழுப்பினார்கள்.ஹஜ் பெருநாளுக்கு முன் 2 நாள் வரை மழை இல்லை வெயில் தான் இருந்தது ஆனாலும் இவர்கள் திடலை சுத்தம் செய்யாமல் திடல் சேராக இருக்கிறது என்று சமாளிக்கின்றனர்.
இவர்களின் கொள்கை அழிந்து வருவதை கண்னால் காணமுடிகின்றது.
அல்லாஹ் இவர்களுக்கு நேர் வழி காட்டுவானாக...
அடியக்கமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ மட்டும் தான் நபிவழி முறையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடத்தியது எனபது குறிப்பிடத்தக்கது.
எல்லா புகழும் இறைவனுக்கே...