இந்நிகழ்ச்சியை TNTJ குவைத் மண்டல அழைப்பாளர் A. முஹம்மது பைசல் அவர்கள் தலைமை தாங்கி துவங்கி வைத்தார்கள்.
அதன்பின் TNTJ மாநில பேச்சாளர். M.அப்துல் கபூர் மிஸ்பாஹி அவர்கள்,"அற்ப பதவியா? சொர்க்க பதவியா??" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதனை தொடர்ந்து TNTJ மாநில மேலான்மைகுழு உறுப்பினர் M.A.F.அல்தாஃபி. அவர்கள் "சுன்னத் ஜமாஅத்தினர் யார் ???" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அடியக்கமங்கலத்தில் மற்றவர்கள் நடத்திய மாநாடுகளை மிஞ்சும் வகையில் இப்பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளம் மேலச்செட்டித் தெருவை குலுக்கியது...அல்லாஹ் அக்பர்...
இறுதியாக TNTJ கிளை துனை செயளாலர் H.முஸ்தாக் அஹ்மத் அவர்கள் நன்றியுரை கூறினார். எவ்வித பிரச்சனையும் இன்றி எல்லாம் வல்ல ஏக இறைவனால் பொதுக்கூட்டம் சிறப்பாக தூஆ-வுடன் நிறைவுப்பெற்றது. அல்ஹதுலில்லாஹ்...
(குறிப்பு: இப்பொதுக்கூட்டம் ஏற்பாடுகள் பற்றியும், எதிர்ப்புகள் பற்றியும், தீர்மானங்கள் பற்றியும், கோடைக்கால் பயிற்சி முகாமில் பரிசுபெற்ற மாணவ மாணவைகளை பற்றியும், உரைகளை பற்றியும் விபரம் இன்ஷா அல்லஹ் பொதுக்கூட்ட துளிகள் என்ற தலைப்பில் விரைவில் வெளியிடப்படும்...)