FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, February 15, 2012

திருவாரூர் வாழ்வுரிமை போராட்ட துளிகள்

Wednesday, February 15, 2012
3:20 PM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-02-2012 திருவாரூரில் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்க்கு செல்வதற்க்கு அடியக்கமங்கலம் கிளை சார்பாக வாகன வசதிகள் செய்யப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அடியற்கையில் இருந்து பலர் தங்களது சொந்த வாகனங்களில் வருகைதந்தனர்.



இப்போராட்டத்திற்க்கு பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு "கட்டிடங்கள் அதிர" அவர்களது கண்டன கோஷங்களை அரசாங்கத்திற்க்கு பதிவு செய்தனர். 

இப்போராத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும், சீறார்களும், பெரியவர்களும் என பலர் கலந்துக்கொண்டு முஸ்லிம்களின் உரிமைகளை வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். 


இப்போராத்ததில் ஏராளமான பெண்களும் ஆர்வத்தோடு கலந்துக்கொண்டு நம் எதிர்கால சந்ததிகளுக்காக போராடினார்கள்.


மேலும் ஒரு பள்ளி மாணவன் தன்னுடைய பள்ளியின் சீருடையுடன் இப்போராட்த்தில் கலந்துக் கொண்டான். பள்ளி மாணவர்கள் படிப்பதே வேலைக்கு செல்லதான். ஆனால் இந்தியாவில் வேலைகிடைக்காவிட்டால் பள்ளிக்கு சென்று பாடம் பயின்று என்ன பலன்? இதை அரசாங்கம் உணர வேண்டும்.


இப்போராத்ததிற்க்கு மாநிலத்தில் இருந்து வருகைதந்திருந்த மாநில பேசாளார். அப்துல் கரீம் அவர்கள் கண்டன உரையாற்றினார்.மேலும் அவர் செய்தாளர்களிடம் பேட்டி அளித்தார். போராட்டம் இனிதே நிறைவு பெற்றது.

-TNTJ AYM செய்தி தொடர்பாளர்கள்.


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: திருவாரூர் வாழ்வுரிமை போராட்ட துளிகள் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top